நாட்டை அழித்துவிடவேண்டாம்

peoplenews lka

நாட்டை அழித்துவிடவேண்டாம்

தர்கா நகரில் கலவரத்தை ஏற்படுத்தியது போன்று மீண்டும் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிடவேண்டாம் என ஞானசார தேரரிடம் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈஸ்ட்ர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம் பாதிகப்பட்டவர்களுக்கு இதுவரை நீதியை பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

இதன்படி ,தற்போது மக்கள் அரசாங்கத்தை பார்த்து கேள்விகேட்கும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைக்க மீண்டுமொரு தாக்குதல் குறித்து பேசுவதாக தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் அச்சம், பயத்தை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிட வேண்டாம் என ஞானசார தேரரிடம் கேட்டுகொள்வதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

மேலும் ,இதேவேளை பைத்தயக்காரர் போன்று புலம்பும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஞானசார தேரர் பயணிக்கும் பாதையில் செல்வதாகவும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது......

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More